சாமி கும்பிட்டு திரும்பி பார்ப்பதற்குள் 2 குழந்தைகளை தூக்கி ஓடிய பெண்- பிடித்து வெளுத்தெடுத்த மக்கள்

x

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் அழகுபட்டியை சேர்ந்த மாரியம்மாள்- சூர்யா தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும், 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் நடைபெற்ற திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக 2 குழந்தைகளையும் அவரது பெரியம்மா கோவிலுக்கு அழைத்து சென்றார்.

குழந்தையை கோவிலுக்கு வெளியே நிறுத்திவிட்டு சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது 2 குழந்தைகளையும் காணாமல் அவர் அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகளை மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் எடுத்து கொண்டு கோபால்பட்டியை நோக்கி சென்ற பஸ்சில் ஏறியதாக சிலர் தெரிவித்தனர். கோபால்பட்டி வந்த அந்த பேருந்தில் இருந்து இறங்கிய அந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து குழந்தையை மீட்டனர். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தகவலறிந்து சென்ற குழந்தைகளின் தாய் மாரியம்மாள் தனது இரண்டு குழந்தைகளையும் மகிழ்ச்சியுடன் தூக்கி வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்