"ரொம்ப Clever-னு நினைப்பா" விவசாயி மகனை தாக்கும் காவல் ஆய்வாளர்.. வைரலாகும் வீடியோ

x

திண்டுக்கல்லில் மாடு தொலைந்ததாக புகார் அளித்த நிலையில், காவல் நிலையத்தில் முறையிடச் சென்ற விவசாயி ஒருவரின் மகன் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் அருகே மா மு கோவிலூரைச் சேர்ந்த முகமது நஸ்ருதீன், தனது பசுமாட்டை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக தனது மகனுடன் சென்று, காவல் ஆய்வாளர் கூறும் பதில்களை வீடியோவாக பதிவு செய்ய முயன்றார். இதையறிந்த காவல் ஆய்வாளர், மகனின் செல்போனை பறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்