திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் - சுவரில் மோதி கோர விபத்து.. மூளை சிதறி பலியான இளைஞர்

x

திண்டுக்கல்லில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் ஒன்று காவல்துறை எஸ்.பி.யின் வீட்டு சுவற்றில் மோதியது. இதில் இளைஞர் ஒருவர் பலியானார். பாலகிருஷ்ணாபுரம் ஏர்போர்ட் நகர் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ், சந்தோஷ் ஆகிய இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். அதிவேகமாக வந்த இவர்கள், தாலுகா காவல்நிலையம் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து மாவட்ட எஸ்பியின் வீட்டு சுவற்றில் மோதினர். இதில் ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி உயிரிழந்தார். சந்தோஷ் கவலைக்கிடமாக சிகிச்சையில் உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்