இளைஞர் மரணத்தில் விளங்காத மர்மம்.? போராட்டத்தில் குதித்த உறவினர்கள்.. திண்டுக்கலில் பரபரப்பு சம்பவம்

x

விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞர் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை வெளியே சாலை மறியல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கல்லுப்பட்டியைச் சேர்ந்த பிரபாரனை ராஜகாப்பட்டியை சேர்ந்த அவரது நண்பரான குமரேசன் தனது ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். கம்பளிபட்டியில் எந்த ஒரு வாகனமும் மோதாமல் ஆட்டோ விபத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் பிரபாகரன் பலியான நிலையில் குமரேசன் தலைமறைவாகியுள்ளார். குமரேசனைக் கைது செய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என கூறி பிரபாகரனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்