மிதக்கவிட்ட கொடூர மழை... ருத்ர தாண்டவமாடிய காட்சி - மரண பீதியில் மக்கள்

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நேற்று பெய்த மழை, பலரது இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

பொட்டிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் ஆளுயரத்திற்கு மழைநீர் தேங்கியது. இதனால், அவ்வழியாக செல்ல முடியாத பாதசாரிகள் ஆபத்தான முறையில் நடந்து செல்கின்றனர். மேலும் மழை காரணமாக ரயில்வே தண்டவாளத்தில் இருந்த ஜல்லிக்கற்கள் அடித்து செல்லப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பணியாளர்கள் இவற்றை சரி செய்தனர். இதனால் அனைத்து ரயில்களும் அந்த பகுதியில் மெதுவாக இயக்கப்பட்டது. மேற்கு கருஞ்சின்னானூரில் உள்ள ஆற்று ஓடை நிரம்பி, வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதில் மாரிமுத்து என்பவரின் வீட்டில் இருந்த பொருட்கள், ஆட்டுக்குட்டி, கோழிக்குஞ்சுகள் ஆகியவை அடித்து செல்லப்பட்ட நிலையில், பழனிமுத்து தனது வாழ்வாதாரத்தை இழந்தார். தண்ணீரானது தற்போது வடிந்துள்ள நிலையில் பல வீடுகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்