பேத்தியையும், மருமகனையும் வீட்டோடு வைத்து கதறவிட்ட மாமனார்...ஜன்னல் வழியே உணவு...மிரண்ட குழந்தை

x

செய்த தவறால் இருண்டு போன வாழ்க்கை பேத்தியையும், மருமகனையும் வீட்டோடு உள்ளேயே வைத்து கதறவிட்ட மாமனார் ஜன்னல் வழியே உணவு... மிரண்ட மகள்


மாமனாருக்குக் கொடுத்த கடனை மருமகன் திருப்பி கேட்டதால் இரவில் 10க்கும் மேற்பட்டவர்களுடன் சென்று நடத்திய பரபரப்பு சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

வீட்டினுள் பெரிய கற்கள்.. மற்றும் உடைந்த கண்ணாடி பாட்டில்கள் சிதறிய நிலையில் கிடக்க ஓரமாக நின்று கொண்டிருந்தனர் தந்தையும் மகளும். வீட்டின் கதவு பூட்டப்பட்டதால் ஜன்னல் வழியே இருவருக்கும் உணவளித்த உறவினர்கள்.. என்ன நடந்தது...?

தருமபுரி மாவட்டம் மாட்டியாம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். லாரி ஒட்டுநரான இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உறவினரான ஜெயலட்சுமி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிவகுமாரிடம் அவரது மாமனார் ரங்கநாதன் ரூ 7 லட்சமும், சின்ன மாமனார் கோவிந்தன் ரூ 3 லட்சம் என மொத்தமாக ரூ 10 லட்சம் கடனாக வாங்கியுள்ளனர்.

இதனிடையே மற்றொரு பெண்ணுடன் சிவக்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டு அவரை திருமணமும் செய்து இருக்கிறார். ஆனால் திருமணமான மூன்றே மாதத்தில் அந்த பெண் சிவக்குமாரை பிரிந்து சென்று இருக்கிறார்.

இதனிடையே இந்த திருமணத்திற்குப் பின் ஜெயலட்சுமி சிவகுமாருடன் சேர்ந்து வாழாமல் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சிவக்குமார்

மாமனார்களிடம் கடனாகக் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டு இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த மாமனார் ரங்கநாதன், மாமியார் ரத்னா, சின்ன மாமனார் கோவிந்தன் ஆகியோர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் வந்து சிவக்குமாரின் வீட்டின் மீது சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும் வீட்டின் கதவைப் பூட்டி சென்றதால் பெண் குழந்தையுடன் வீட்டில் முடங்கி இருக்கிறார் சிவக்குமார்.

நண்பர்களுக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சிவக்குமாருக்கு ஜன்னல் வழியாக உணவு பொட்டலங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்னர் அவர்கள் தான் பூட்டிய கதவைத் திறந்து விட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது... இருந்தபோதிலும் இந்த பயங்கர சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்