சீதனமாக வந்த பசுமாட்டிற்கு சீமந்தம்.. குடும்பத்தில் ஒருவராக மாறிய பசு மாடு

x

தர்மபுரி அடுத்த நல்லம்பள்ளி அருகே உள்ள நாகர்கூடல் கிராமத்தில் சீதனமாக வந்த பசுமாட்டிற்கு ஒரு தம்பதி சீமந்தம் செய்து அழகு பார்த்துள்ளனர். அழகேசன் ஓவியா தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில், ஓவியாவின் பெற்றோர் சீதனமாக வழங்கிய பசுமாடு கர்ப்பம் தரித்துள்ளது. அதைக் கொண்டாடும் விதமாக உறவினர்கள் நண்பர்கள் என அனைவரையும் அழைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சீமந்தம் செய்வதை போலவே மாட்டுக்கும் சீமந்தம் செய்து அசத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்