டிஜிபி கைக்கு வந்த தென்மாவட்ட ரவுடிகள் லிஸ்ட்...தாதாக்களை கதிகலங்கவிட்ட `ஹை பவர்’ மீட்டிங்

x

டிஜிபி கைக்கு வந்த தென்மாவட்ட ரவுடிகள் லிஸ்ட்...தாதாக்களை கதிகலங்கவிட்ட `ஹை பவர்’ மீட்டிங்

நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்ட சட்டம்- ஒழுங்கு விவகாரம் தொடர்பாக காவல் உயரதிகாரிகளுடன் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார்.

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட சட்ட ஒழுங்கு விவகாரம் மற்றும் காவல்துறையினரின் குறைகளை கேட்டு அறிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக நெல்லை வருகை தந்துள்ளார். முதல் நிகழ்ச்சியாக நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், 4 மாவட்டங்களில் நடைபெற்ற கொலை சம்பவங்கள், கைது செய்யப்பட்டவர்களின் விபரம், ரவுடிகள் பட்டியல் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட விபரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், நெல்லை மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்