"நிபந்தனையை மீறினால் ஜாமினை ரத்து செய்க" - டிஜிபிக்கு கடிதம்

x

மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, டி.ஜி.பி.க்கு எழுதியுள்ள கடிதத்தில், ஜாமினில் வெளியே வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டால், ஜாமினை ருத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். காவல்துறையினர், அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை அணுகி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கடுமையான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில், தனிக்கவனம் செலுத்தி, புலன் விசாரணையை முடித்து உரிய காலக் கெடுவிற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் குற்றவாளிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்படுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்