டெங்கு காய்ச்சலால் சிறுவன் மரணம்.. பெண் கைது

x

பொம்மிக்குப்பம் பகுதியை சேர்ந்த உதயகுமார் - மணிமேகலை தம்பதியின் 9 வயது மகன் கவியரசுவிற்கு கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குல்ல மெடிக்கலில் ஊசி போட்டுள்ளனர். எனினும், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் டெங்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பொம்மிகுப்பம் மற்றும் பசிலிகுட்டை பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவரின்றி சிகிச்சை அளித்து வந்ததாக 5 மருந்தகங்களுக்கு சீல் வைத்தனர். மேலும், நந்தினி என்பவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்