சென்னைக்கு வந்து அலறவிட்ட டெல்லி போலீஸ்

x

நாடு முழுவதும் 30 ஆயிரம் பேரிடம் 500 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக ஹை பாக்ஸ் (Hi box) என்ற நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி வரும் டெல்லி சைபர் கிரைம் போலீஸ் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சென்னை வண்ணாரப்பேட்டையில் satrulla express பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் நடத்தி வரும் சிவ்ராம் என்பவரை கைது செய்தனர். அவரது வங்கி கணக்குகள் மூலம் மோசடி செய்யப்பட்ட பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிவ்ராம் வங்கி கணக்கை முடக்கி 18 கோடி ரூபாயை டெல்லி சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட சிவ்ராமை டெல்லிக்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்