கெஜ்ரிவாலுக்கு பெரும் சிக்கல்... ஆம் ஆத்மி பேரிடி... எதிர்பாராத ஷாக் கொடுத்த ED

x

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், குற்றப்பத்திரிக்கையில், ஆம் ஆத்மி கட்சி சேர்க்கப்படும் என, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் ஜாமின் கோரிய முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா விசாரித்து வருகிறார். இன்றைய விசாரணையின்போது, அமலாக்கத் துறையின் சாரபில் ஆஜரான வழக்கறஞர், இந்த வழக்கில் விரைவில் துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறினார். அதில், ஆம் ஆத்மி கட்சியை சேர்க்கவுள்ளோம் என்றும், இந்த விவகாரத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை 250 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனால் விசாாரணை அதிகாரி நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டியுள்ளதால், மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க கூடாது என வாதிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்