விளை நிலங்களை அழித்து சுரங்கம் அமைப்பதா? - மநீம தலைவர் கமல்ஹாசன்...

x

என்.எல்.சி நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்கப்பணிக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறும் சூழலில், இதுகுறித்து மநீம கட்சி தலைவர் கமலஹாசன் அறிக்கை விடுத்துள்ளார். அதில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து வளர்ச்சி கிடைக்கும் என்றால் அப்படிப்பட்ட வளர்ச்சி தேவையே இல்லை என்றும், பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு சுரங்க விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நிலம் கையகப்படுத்தலை கைவிட்டு, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்