டேட்டிங் ஆப் பழக்கத்தால் வந்த வினை...ஆசையாய் சென்றவருக்கு நேர்ந்த சோகம்..சென்னை வடபழனியில் அதிர்ச்சி

x

டேட்டிங் ஆப் பழக்கத்தால் வந்த வினை... ஆசை ஆசையாய் சென்றவருக்கு நேர்ந்த சோகம்... சென்னை வடபழனியில் அதிர்ச்சி

சென்னையில் சினிமா சவுண்ட் இன்ஜினியரை டேட்டிங் ஆப் மூலம் பழகி வரவழைத்து, பணப் பறிப்பில் ஈடுபட்ட புகாரில், சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கேகே நகரை சேர்ந்த சுரேஷ் என்பவர் சினிமா சவுண்ட் இன்ஜினியராக உள்ளார். இவர் வடபழனி காவல்நிலையத்தில் அளித்த புகாரில், டேட்டிங் ஆப் மூலம் பழகிய ஆண் நபர், கடந்த 15ஆம் தேதி வீட்டுக்கு வரவழைத்த‌தாக கூறியுள்ளார். அங்கு, 2 பெண்கள் உட்பட 7 பேர் தன்னை கட்டிப்போட்டு, 2 நாட்களாக தாக்கி, ஜிபே மூலம் 27ஆயிரம் ரூபாய் பணம், இருசக்கர வாகனம், செல்போனை பறித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து, புகார் கூறினால் சமூக வலைத்தளங்களில் விட்டுவிடுவோம் என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார். புகார் தொடர்பாக, 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சரேஷை தாக்கிய தஞ்சாவூரை சேர்ந்த மாதவன், வடபழனியை சேர்ந்த இம்ரான், பரத்குமார் மற்றும் 17 வயது சிறுவன் என 4 பேரை கைது செய்தனர். இந்த கும்பல் எத்தனை பேரிடம் பணப் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்