மாணவர்களை அந்த வார்த்தைகளை பேச வைத்து வீடியோ எடுத்த டீச்சர் - கொந்தளிக்கும் பெற்றோர்

x

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பள்ளி மாணவர்களை அவதூறாக பேச வைத்து வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்...கொங்கராயனூர் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் மூன்று ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் இரண்டு ஆசிரியைகளுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக தெரிகிறது. மேலும், ஒரு ஆசிரியை மாணவர்களை அவதூறாக திட்டியதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியை கூறிய வார்த்தைகளை மாணவர்களை பேசக் கூறி மற்றொரு ஆசிரியை வீடியோ எடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்