"நகை வைப்பதற்கு ரூ 200..! மீட்பதற்கும் ரூ 200..!"நக்கலாக பேசிய அலுவலக ஊழியர்..! விவசாயி செய்த செயல்

x

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கூட்டுறவு கடன் சங்க அலுவலக ஊழியர் நகைக் கடன் கேட்கும் விவசாயிடம் கூடுதலாக பணம் கேட்கும் வீடியோ வைரலாகியுள்ளது. சித்திரைசாவடி பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திற்கு செந்தில் முருகன் என்பவர் நகையை அடகு வைப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது ஊழியர், நகை வைப்பதற்கு 200 ரூபாயும் மீட்பதற்கும் 200 ரூபாயும் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்