தலையில் ஏறி இறங்கிய பள்ளி பேருந்து.. இரண்டரை வயது குழந்தைக்கு பெருஞ்சோகம்.. கதறி அழும் குடும்பம்

x

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பட்டாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வம். இவருக்கு திருமணம் ஆகி இரண்டரை வயதில் எழிலன் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், இன்று காலை தனது பெரியம்மா ரேவதியின் மகன் புவனேஷ்வனை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட எழிலனும் உடன் சென்றுள்ளான். அப்போது பின்னால் வந்த தனியார் பள்ளி பேருந்து எழிலன் மீது மோதியுள்ளது. இதில் குழந்தையின் தலையில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கிய நிலையில் சம்பவிடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளது. தகவல் அறிந்து வந்த ராமநத்தம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்