இரவோடு இரவாக வயலை அளித்த அதிகாரி..! ஆட்சியரிடம் கண்ணீருடன் கதறும் விவசாயி | Cuddalore

x

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில், உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக, நடவு செய்யப்பட்ட வயலை அறிவிப்பின்றி அழித்த‌தாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். நடவு செய்த வயலில் இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரம் மூலம், 10 அடிக்கும் மேல் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அனுமதி பெறாமலும், அறிவிப்பு கொடுக்காமலும் பள்ளம் தோண்டியதாக தெரிவித்த விவசாயிகள், தோண்டப்பட்ட இடத்தை திருத்த 5 வருடங்கள் ஆகும் என வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளதாகவும், சேதமடைந்த நிலத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்