கடையில் அரிசி சிப்பம் வாங்கி சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி.. உள்ளே இருந்த ரூ.10 லட்சம்

x

கடையில் அரிசி சிப்பம் வாங்கி சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி.. உள்ளே இருந்த ரூ.10 லட்சம்

கடலூர் மாவட்டம் வடலூரில் திருடனுக்கு பயந்து அரிசி மூட்டையில் 15 லட்ச ரூபாயை கடை உரிமையாளர் பதுக்கி வைத்த நிலையில், அதை ஊழியர் விற்பனை செய்த சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சண்முகம் என்பவர் வடலூரில் அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவர் திருடனுக்கு பயந்து 15 லட்சத்தை அரிசி மூட்டையில் வைத்திருந்த நிலையில், அது தெரியாமல் ஊழியர் விற்பனை செய்துள்ளார். இதையறிந்த சண்முகம், அரிசி மூட்டையை வாங்கியவரிடம் கேட்டபோது 10 லட்சம் மட்டும் இருந்ததாக அவர் கூறியுள்ளார். மீதம் 5 லட்சம் ரூபாய் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்