லஞ்சம் வாங்கிய அதிகாரி தட்டி தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறையினர்

x

கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், கட்டாய கல்வி

உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணமாக 14 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் தமிழக அரசிடமிருந்து வர வேண்டி இருந்தது. இந்தத் தொகையை விடுவிக்க, கடலூர் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கணேசன், அந்த பள்ளியின் தாளாளரிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத பள்ளி தாளாளர், கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரை அணுகினார். ரசாயன தடவிய 25 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அவர்களிடம் இருந்து பெற்று, கல்வி அலுவலக

கண்காணிப்பாளர் கணேசனிடம் கொடுத்த போது, பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கணேசனை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்