கண்டித்த போலீஸ்..தலையை சுற்றி ரிவெஞ்ச் எடுத்த குடிமகன்.. இடம் தெரியாமல் திணறும் காவல்துறை

x

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே, போதை நபர் தூக்கி வீசிய போலீஸ் வாக்கி டாக்கியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். கிளியனூர் பகுதியில் வெள்ளாற்று ஓரமாக புதுச்சேரியை சேர்ந்த 2 பேர் மது அருந்திக்கொண்டிருந்த போது, போலீசார் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்ட நிலையில், போலீசாரின் வாக்கிடாக்கியை ஆனந்த் என்பவர் திடீரென பிடுங்கி தூக்கி வீசியுள்ளார். முட்புதரில் விழுந்த வாக்கி டாக்கியை கண்டுபிடிக்க முடியாத‌தால், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வைத்தும் தேடுதலில் ஈடுபட்டனர். அதே நேரத்தில், வாக்கிடாக்கியை வீசிவிட்டு தலைமறைவான ஆனந்தையும் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்