"சுதன் நல்லவர்.. கடைசியா மகனுடன் வீடியோ கால்".. முன்னாள் காதலி சொன்ன பரபரப்பு தகவல்

x

ஹைதராபாத்தில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்த சுதன்குமார் என்ற இளைஞர், தனது 10 வயது மகன் மற்றும் 65 வயது தாயாருடன் உடல் எரிக்கப்பட்ட நிலையில் வீட்டிற்குள் சடலமாக கிடந்தது கடலூரை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. கடந்து ஏழு வருடங்களுக்கு முன்பே சுதனை பிரிந்து விவாகரத்து பெற்ற அவரின் மனைவி வேறொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஹைதராபாத்தில் பெண் ஒருவருடன் சுதன் லிவ் இன் உறவில் இருந்த நிலையில், இதில் பிறந்த குழந்தைதான் தற்போது கொலை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. லிவ் இன் உறவில் இருந்து வந்த பெண்ணும், சுதனை பிரிந்து வேறொருவரை மணமுடித்த நிலையில், வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கிறார். இந்நிலையில், அவர் 3 நாட்களுக்கு முன்பு இந்தியா திரும்பியது தெரியவர அவரை கடலூர் போலீசார் காவல்நிலையம் அழைத்து விசாரணை நடத்தி இருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்