ஒரே மாவட்டத்தில் கணவர் கலெக்டர்... மனைவி மாநகராட்சி ஆணையர்.. இதுவே முதல்முறை

x

ஒரே மாவட்டத்தில் கணவர் கலெக்டர்... மனைவி மாநகராட்சி ஆணையர்.. இதுவே முதல்முறை

கடலூர் மாவட்ட ஆட்சியராக சிபி ஆதித்யா கடந்த வாரம் நியமிக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி அனு ஐ.ஏ.எஸ்., மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ் கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய ஆட்சியராக 19ஆம் தேதி சிபி ஆதித்யா பொறுப்பேற்றார். இவருடைய மனைவி அனு ஐ.ஏ.எஸ்., அரசு துணை செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவரை கடலூர் மாநகராட்சியின் ஆணையராக நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், கடலூர் மாநகராட்சியாக மாறியதற்கு பிறகு ஆணையராக பதவியேற்கும் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார். கடலூரில் கணவர் ஆட்சியராகவும், மனைவி மாநகராட்சி ஆணையராகவும், ஒரே இடத்தில் பணிபுரிவது இதுவே முதல்முறையாகும்.


Next Story

மேலும் செய்திகள்