உள்ளாடைக்குள் 72 லட்சம்.. ஏர்போர்ட்டை மிரட்டிய நபர்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

x
  • மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை மீனம்பாக்கத்திற்கு வந்த பயணிகளை அதிகாரிகள் வழக்கம் போல சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சென்னையைச் சேர்ந்த இளைஞரை தடுத்து நிறுத்தி சுங்கத் துறையினர் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசினார். பின்னர் தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்த போது உள்ளாடைக்குள் சிறிய பார்சலை மறைத்து தங்கம் கடத்தியது தெரியவந்தது. சுமார் 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ 24 கேரட் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், குருவியாக தங்கத்தை கடத்திய இளைஞரை கைது செய்தனர். இதன் பின்னணியில் உள்ள கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்