வெளிநாட்டில் இருந்து பெண் வெளியிட்ட வீடியோ.. கடலூரில் அதிரடி காட்டிய காவல்துறை

x

"தன்னை விற்று விட்டதாக" வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற பெண் வீடியோ வெளியிட்ட நிலையில், வெளிநாடு அனுப்பி வைத்த ஏஜென்ட் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே எள்ளேரி கிராமத்தை சேர்ந்த ஜெனுபா பானு, கணவர் இறந்து விட்ட நிலையில், மகள்கள், மகனுடன் வசித்து வருகிறார். கடந்த மே மாதம் சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர் மூலம், துபாயில் வீட்டு வேலை செய்வதற்காக, அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மஸ்கட் பகுதியில் உள்ள ஏஜென்டிடம் விற்பனை செய்யப்பட்டதாகவும், அந்த ஏஜென்ட் ஜெனுபா பானுவை அடைத்துவைத்து சித்ரவதை செய்ததாக வீடியோ வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து ஜெனுபா பானு குடும்பத்தினர் இஸ்மாயில் என்பவர் மீது புகார் அளித்தனர். இதையடுத்து, இஸ்மாயிலை, காட்டுமன்னார்கோவில் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்