"அடுத்து யார் வீடு எரிய போகுதோ?" - திடீர் திடீரென பற்றி எரியும் வீடுகள்..தூக்கம் தொலைத்த கிராமம்

x

கடலூர் அருகே கடந்த 2 மாதங்களாக திடீர் திடீரென வீடுகள், வைக்கோல் போர்கள் பற்றி எரிவதால், பதற்றம் அடைந்துள்ள அப்பகுதி மக்கள் அச்சத்திலும், பீதியிலும் உறைந்துள்ளனர்.

கல்குணம் கிராமத்தில் கடந்த இரண்டு மாத காலமாக வீடுகள் இரவு நேரங்களில் திடீர் திடீரென பற்றி எரிகிறது. மர்ம நபர் யாரோ ஒருவர் வீடுகளை கொளுத்தி செல்வதாக பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். வீடுகள் மட்டுமின்றி மாடுகளுக்கு தீவனத்திற்காக வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர்களும் பற்றி எரிகிறது. கடந்த 2 மாதத்தில் 5 வீடுகள், 3 வைக்கோல் போர்கள் எரிந்துள்ளதாக கூறும் மக்கள், அடுத்து யார் வீடு பற்றி எரியப் போகிறதோ என பதற்றமாக இருப்பதாக கூறுகின்றனர். 2 மாதமாக உயிர் பயத்தில் தூக்கம் தொலைத்து, நிம்மதியின்றி தவிப்பதாக வேதனை தெரிவிக்கும் கல்குணம் கிராமமக்கள், வீட்டை கொளுத்தி விட்டு செல்லும் மர்ம நபரை உடனடியாக அடையாளம் கண்டு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்