பைக்கில் சென்றவர் நெஞ்சு கிழிந்து சாலையில் கொட்டிய ரத்தம்.. வாகன விபத்த்தின்றி இப்படியும் ஒரு மரணமா?

x

பைக்கில் சென்றவர் நெஞ்சு கிழிந்து சாலையில் கொட்டிய ரத்தம்.. வாகன விபத்த்தின்றி இப்படியும் ஒரு மரணமா?

கடலூர் அருகே மாடு முட்டி இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பருத்திபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜதுரை என்பவர் கடலூர் மாவட்டம் பல்லவராயநத்தம் பகுதியில் தங்கி நெல் அறுவடை இயந்திர டிரைவராக பணிபுரிந்து வந்தார். அவர் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் நெல்லிக்குப்பத்தை அடுத்த கீழ்அருங்குணம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த மாடு ராஜதுரையை பலமாக முட்டி தள்ளியது. மாட்டின் கொம்பு குத்தியதில் நெஞ்சில் பலத்த காயமடைந்த ராஜதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு

மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த

சம்பவத்தில் கொம்பு உடைந்து மாட்டிற்கும்

காயம் ஏற்பட்டுள்ளது. மாடு முட்டி ராஜதுரை

உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே

சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்