சிக்கன் ரைஸ் சாப்பிட போறீங்களா! அப்ப இதை பாருங்க! கதிகலங்க வைத்த அதிர்ச்சி செய்தி! கடலூரில் பரபரப்பு

x

கடலூர் மாவட்டம், தாழங்குடா பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர், நேற்று இரவு கடற்கரை சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் சிக்கன் ரைஸ் மற்றும் தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதனை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, 4 பேருக்கும் வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகாரளிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவகத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், காலாவதியான உணவு பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், உணவகத்தின் சமையற்கூடத்திற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்