ஹோட்டலில் கைவரிசை காட்டிய இளைஞர் வெளியான சிசிடிவி காட்சி

x

சிதம்பரம் அருகே ஹோட்டலில் கைவரிசை காட்டியவரை, இளைஞர்கள் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது கொள்ளையர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடித்ததால் போலீசார் திருப்பி அனுப்பினர்.

ஆணையம்பேட்டை பகுதியில் மதிமுக பிரமுகர்

ராமச்சந்திரன் என்பவரின் ஹோட்டலுக்கு கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அதிகாலையில் புகுந்த வட மாநில இளைஞர், கல்லாப்பெட்டியை திறந்து பார்த்தார். அதில் பணம் இல்லாததால், முதியோர்களுக்கு நிதி வசூலிக்கப்படும் பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துச் சென்றார். அதில் பெரிய அளவு பணம் இல்லாததால் புகார் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியில் அந்த வட மாநில இளைஞர் சுற்றி திரிந்ததால் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்