கடலூரில் குளத்தில் முதலை.. விட்டதும் விருட்டென பாய்ந்த பகீர் காட்சி

x

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே, குளத்தில் இருந்த 4 அடி நீளமுள்ள முதலையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். ஆயக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள குளத்தில் சுமார் 4 அடி நீளமுள்ள முதலையை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த வனத்துறையினர், குளத்தில் இறங்கி முதலையை லாவகமாக பிடித்து, சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்