முன்விரோதத்தால் நேர்ந்த சோகம்.. தலையில் அம்மிக்கல்லால் அடித்து இளைஞர் கொலை

x

பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்தவர் கலைவாணன். இவர் சம்பவத்தன்று மது அருந்தியிருந்ததால், வீட்டிற்குள் மனைவி அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், வீட்டு வாசலில் படுத்திருந்த கலைவாணன், மர்ம நபர்களால் தலையில் அம்மிக்கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த வசந்த் என்பவரின் தாயுடன் கலைவாணன் சில மாதங்களுக்கு முன் தகராறு செய்து தகாத வார்த்தையில் திட்டியது தெரிய வந்திருக்கிறது. இதனால், ஆத்திரத்தில் இருந்த வசந்த், தனது நண்பர்களான தமிழ், சந்தோஷ், அருண் ஆகியோருடன் சேர்ந்து கலைவாணனை அம்மிக்கல்லால் அடித்து கொன்றது தெரியவந்தது.‌ இதையடுத்து, தலைமறைவாக உள்ள வசந்த் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். கொலையுண்ட கலைவாணன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு உட்பட 7 வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பெரும்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் உளவாளியாக கலைவாணன் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படும் நிலையில், இதனால், அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்