வெறிபிடித்த பசுமாடு...6 பேரை முட்டி தூக்கிய சோகம்..சென்னையில் மீண்டும் பயங்கரம்..! | Chennai

x

ஐயப்பன்தாங்கல் பகுதியில் மாடு ஒன்று கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரை முட்டி பதம் பார்த்தது.

அதே போல் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் நேற்று இரவு பசு மாடு ஒன்று அவ்வழியாக சாலையில் நடந்து சென்ற பொது மக்களை துரத்தி துரத்தி முட்டி தள்ளியது. மாடு முட்டியதில் காவலர் உட்பட 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சாலையில் சென்ற வாகனங்களையும் விட்டு வைக்காத அந்த மாடு வாகனங்களையும் துரத்தியதால் வாகன ஓட்டிகள் மாட்டினை கடந்து செல்ல அச்சப்பட்டு சாலையிலேயே நின்றதால் சில மணி நேரத்திற்கு அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. 2 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பின்பு ஒரு வழியாக மாட்டினை கயிற்றைக் கொண்டு பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். முதற்கட்ட விசாரணையில் சில நாட்களுக்கு முன்பு அந்த பசுமாட்டினை வெறிநாய் கடித்ததால் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் மாட்டின் உரிமையாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்