சென்னையில் சிறுமியை முட்டிய மாடு... சிறுமியை நலம் விசாரித்த ஆணையர் - கால்நடை வளர்ப்போருக்கு வார்னிங்

x

சென்னை, அரும்பாக்கத்தில் மாடு தாக்கியதில் படுகாயமடைந்த சிறுமியை, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பள்ளி முடிந்து தாயுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியை சென்னை, அரும்பாக்கத்தில் வைத்து மாடு கொடூரமாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்தான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், படுகாயமடைந்த மாணவி அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியின் தலையில் 4 தையல்கள் போடப்பட்ட நிலையில், அவரை சென்னை, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்