மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு

x

திருப்பூர் அருகே மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆசர் மில் பகுதியில் குடிநீர் குழாய் சீரமைக்கும் பணிக்கு பள்ளம் தோண்டும் பணியில் மாநகராட்சி சார்பில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற லாரி ஒன்று மின்கம்பத்தில் உரசியதால், மின்வயர் அறுந்து விழுந்தது. இதில் அங்கு பணி செய்து கொண்டிருந்த ஒப்பந்த ஊழியரான காங்கேயத்தைச் சேர்ந்த மணி, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனிடையே, லாரி ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்