பிரபல கல்லூரி மாணவன் ரத்த வாந்தி எடுத்து பலி.. சக மாணவர்களால் ஸ்தம்பித்த சென்னை ECR

x

சென்னை கானத்தூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22-வயதான பிரசாந்த் என்ற கல்லூரி மாணவன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், கானத்தூரில் உள்ள தனியார் கடல்சார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். கல்லூரி தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்த இவர், இரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், மாணவன் பிரசாந்த் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சக கல்லூரி மாணவர்கள் நியாயம் கேட்டு கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் கல்லூரியின் எதிரே மறியலில் ஈடுபட்டனர். இதனால், கடுமையான போக்குவரத்து பாதிப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்