மதுரையில் விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த ஆட்சியர் | Madurai | Farmers | Thanthitv

x

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் விவசாயிகள் குறைதீர்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய விவசாயி ஒருவர், குறைதீர் கூட்டத்தில் பல மாதங்களாக முதலமைச்சரின் படமும், பென்னிகுவிக் படமும் இடம்பெறவில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், கலெக்டர் ஆபீஸ் வேறு இடத்துக்கு போய்விட்டது எனவும் இது கூடுதல் கட்டிடம் எனவும் பதிலளித்தார். இதனைக் கேட்ட விவசாயிகள் சிலர் கலகலவென சிரித்தனர். ஆனாலும் திசை திருப்பும் விதமாக சம்பந்தமில்லாமல் ஆட்சியர் பதிலளிப்பதாக விவசாயிகள் சிலர் பேசிக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து அருகிலுள்ள அதிகாரிகளை அழைத்து முதலமைச்சர் படத்தை மாற்றுவதற்கு சொல்லி இருந்தேன் ஏன் இன்னும் மாற்றவில்லை என ஆட்சியர் கடிந்துகொண்டார்....


Next Story

மேலும் செய்திகள்