கோவை பிரபல தனியார் கல்வி நிறுவனம் சார்பில் பாலம்.. எதிராக எழும் கேள்விகள்

x

கோவை அவிநாசி சாலையில் தனியார் கல்வி நிறுவனம் சார்பாக கட்டப்பட்டு வரும் பாலத்திற்கு எதற்காக அனுமதி அளிக்கப்பட்டது என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது...

இதே பகுதியில் ஏற்கனவே அரசு சார்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இது ஒரு புறமிருக்க, அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்வி நிறுவனம் சார்பாக புதிதாக பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் கனரக வாகனங்களுக்கு சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், எதற்காக தனியார் கல்வி நிறுவனத்திற்கு புதிய பாலம் கட்டுவதற்காக அனுமதி வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்