கோவையின் பிரபல கல்லூரியில் புகுந்து மாணவன் சரமாரி கத்தி குத்து - கையோடு தண்டித்த கர்மா

x

கோவை சூலூர் பகுதியைச் சார்ந்த ரோகித் என்ற கல்லூரி மாணவர், பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதால் கல்லூரியில் இருந்த டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்நிலையிலே ஓணம் பண்டிகையை அந்த கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய போது, அங்கு சென்ற ரோகித், மாணவர்களுடன் சண்டையிட்டு, 3 மாணவர்களை கத்தியால் குத்தி காயப்படுத்தினார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்தில் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரோகித்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தன் தவறை உணர்ந்து வீடியோ ஒன்றை ரோகித் வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்