போதையில் பெண்களை போட்டோ பிடித்த போலீஸ் - கோவையில் பரபரப்பு

x

கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில், போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவலர் பாலமுருகன், சாய்பாபா காலனி பகுதியில் இரவில் மதுபோதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்ற இளம் பெண்களை, தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், செல்போனை பறித்துக்கொண்டதுடன், பாலமுருகனை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியபின் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்