புரோட்டாவுக்கு சால்னா வைக்காததால் ஏரியாவையே பதற்றமாக்கிய நபர்கள்.. கோவையில் அதிர்ச்சி.. பரபரப்பு காட்சி

x

கோவையில், புரோட்டாவுக்கு சால்னா கேட்டு ஹோட்டல் உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள உணவகத்திற்கு,

உக்கடம் ஜி.எம் நகரைச் சேர்ந்த கரீம் மற்றும் சமீர் ஆகியோர் வந்துள்ளனர். அப்போது, புரோட்டாவுக்கு சால்னா கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லாவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்த நிலையில், அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தலைமறைவாக உள்ள நபர்களைத் தேடி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்