காட்பாடியில் இப்படியும் நடந்ததா? -அதிரவிடும் அரசு கல்லூரி மாணவி பேசிய வீடியோ

x

முதல்வர் கோப்பை போட்டிகள் பரிசளிப்பு விழாவில் அரசு கல்லூரி மாணவிகள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்

காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் விழா அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் குடியாத்தத்தில் உள்ள அரசு கல்லூரி மாணவிகள் கபடி போட்டியில் முதலிடம் பெற்ற நிலையில் அவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படவில்லை என்றும் இரவு 7.30 மணி வரை காக்க வைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்