மகளுக்கு அவமானம்.. குடல் சரித்து தந்தை படுகொலை.. சரணடைந்தவரை பார்த்து அதிர்ந்த போலீஸ்

x

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மகளை கேலி செய்த நபரை தட்டிக் கேட்ட தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீரணாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு பயிலும் சிறுமியை கேலி செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த சிறுமியின் தந்தை, முருகேசனை கண்டித்துள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த முருகேசன், சிறுமியின் தந்தையை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், முருகேசன் காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்