கல்யாண சாப்பாட்டால் நேர்ந்த கதி..நேரில் வந்து மிரட்டி விட்ட ASP..சரிக்கு சரி நின்று பேசிய உறவினர் -

x

கல்யாண சாப்பாட்டால் நேர்ந்த கதி..நேரில் வந்து மிரட்டி விட்ட ASP..சரிக்கு சரி நின்று பேசிய உறவினர் - "வீடியோ ஆதாரத்த நான் காட்டவா?"

சிதம்பரத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு குளுக்கோஸ் நீடிலுடன் நோயாளிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் அடுத்த பழஞ்சநல்லூர் கிராமத்தில்

கடந்த 12 ஆம் தேதி நடந்த திருமண விழாவில் சாப்பிட்ட 80க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதில் 70க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென தங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என கூறி அவர்கள் மருத்துவமனைக்கு எதிரே குளுக்கோஸ் நீடிலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஏற்காததால், மறியலில் ஈடுபட்டவர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்