ஹாஸ்பிடலில் கலெக்டர் திடீர் ரெய்டு..பயங்கரமாக பதறிய டாக்டர்கள் - கடகடவென நடந்த வேலைகள்

x

சிதம்பரம் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் கடலூர் ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டதால், மருத்துவர்கள் பதற்றம் அடைந்தனர். கர்ப்பிணி பெண்கள் வருகை, உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். ஆட்சியர் வருகையை தொடர்ந்து, மகப்பேறு பிரிவில் இருந்த கழிவறையை அவசர அவசரமாக ஊழியர்கள் சுத்தம் செய்தனர். சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்