கனகசபை விவகாரம்.. நடவடிக்கை எடுக்கலாம்.. உயர்நீதிமன்றம் அதிரடி | Chidambaram | Thanthitv

x

சிதம்பரம், நடராஜர் கோயில், ஆனி திருமஞ்சன விழாவானது விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது. வழக்கானது, பொறுப்பு தலைமை நீதிபதிகளான, மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், வீதிமீறல்கள் இருந்தால், அறநிலையத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்