மருத்துவம் படிக்காத டாக்டர்... பரிதாபமாய் பிரிந்த உயிர் - `மருத்துவமனையே போலி.?'

x

சிதம்பரத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், போலி மருத்துவமனைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

பொன்னம்பலம் நகர் பகுதியில் பாலு மருந்தகத்தில், பாலுவின் மகன் சரவணன் என்கிற தளபதி ராஜா மருத்துவமனையாக மாற்றி சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. தளபதி ராஜா மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மேலதிருக்கழிப்பாலை கிராமத்தை சேர்ந்த 22 வயதான கவிமணி, காய்ச்சல் காரணமாக அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு தளபதி ராஜா ஊசி போட்டு விட்டு, வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் சரியாகிவிடும் என கூறியுள்ளார். அப்போது, கவிமணி தங்கள் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது வழியில் உயிர் பிரிந்தது. இது குறித்த புகாரைத்தொடர்ந்து, போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த போலி மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்