திடீரென வெடித்த பஸ் டயர்.. அதிர்ச்சியில் சிறுவனின் பார்வைத்திறன் பறிபோன சோகம் | Chidambaram

x

சிதம்பரம் அருகே மினி பேருந்தின் டயர் வெடித்ததில் ஒரு மாணவனுக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. மேலத்திருகழிப்பாளை ஊராட்சியில் வசிக்கும் பரத், மினி பேருந்தில் சிதம்பரம் நகர் பகுதிக்கு பயணம் செய்தபோது, பேருந்தின் டயர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் டயர் அமைந்துள்ள பகுதிக்கு, மேல்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பரத், அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து, மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்