சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த சிறுவன் பலி - கொந்தளித்த ஈபிஎஸ்

x

சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த சிறுவன் பலி - கொந்தளித்த ஈபிஎஸ்

சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் சுகாதாரமற்றக் குடிநீரால் 10 பேர் பலியானதாக செய்திகள் வந்துள்ள நிலையில், தலைநகர் சென்னையிலும் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் சுகாதாரமற்று இருப்பதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு அலட்சியப்போக்குடன் திமுக அரசு செயல்பட்டிருப்பதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்