இரவில் அதிர்ந்த சென்னை... பெரும் விபரீதம்.. சிக்கிய 12 பேர்... `சாபத்தால்' அதிர்ந்த போலீசார்..!

x

சென்னையில் நண்பரின் கொலைக்கு பழி தீர்க்க காத்திருந்த 12 ரவுடிகளை போலீசார் கொத்தாக கைது செய்துள்ளனர்.

சென்னை மேற்கு மண்டல அதிதிவீர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கொலைக்கு பழி தீர்க்க காத்திருக்கும் ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் பதுங்கி இருந்த 12 ரவுடிகளை கொத்தாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி உமர் பாஷாவின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. கடந்த 2022-ம் ஆண்டு உமர் பாஷா வெட்டி கொல்லப்பட்ட நிலையில், அவரை கொன்றவர்களை வரிசையாக கொல்ல திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு உமர் பாஷாவை கொன்ற வழக்கில் தொடர்புடைய நாகூர் கனி என்பவரை காலி செய்ததும், இந்த ஆண்டு அவருடைய நினைவு நாளில் மேலும் சிலரை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. முன்கூட்டியே அவர்களை போலீசார் கைது செய்ததால் சில கொலைகள் தடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்