பாலியல் வழக்கில் சிறை சென்று வந்த டிராமா குயின் கணவனை தீர்த்துக்கட்டி..போலீசே மிரள நாடகம்

x

பாலியல் வழக்கில் சிறை சென்று வந்த டிராமா குயின் கணவனை தீர்த்துக்கட்டி..போலீசே மிரள அரங்கேற்றிய நாடகம் - சென்னையை அதிரவிட்ட பெண்

சென்னை வில்லிவாக்கத்தில் கணவனின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு மனைவி நாடகமாடியது பிரேத பரிசோதனையில் அம்பலமாகியுள்ளது.வில்லிவாக்கத்தை சேர்ந்த கௌஸ் பாஷா என்பவர், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி உயிரிழந்தார். சர்க்கரை நோய், நுரையீரல் பிரச்சனை மற்றும் வலிப்பு உள்ளிட்ட வியாதிகள் இருந்த‌தால், உடல்நலக்குறைவால் உயிரிழந்த‌தாக, அவரது மனைவி ஷாஜிதாபானு கூறிவந்துள்ளார். ஆனால், கௌஷ் பாஷாவின் மரணத்தில் சந்தேகம் இருந்த‌தால், உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்திருந்தனர். அப்போது, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்த‌து. இதையடுத்து, ஷாஜிதா பானுவிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. ஷாஜிதாபானு பாலியல் வழக்கில் சிறை சென்று திரும்பியதால், கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும், அதனால், கெளஷபாஷாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்